Thursday, 4 August 2016

எலுமிச்சம் பழம்

மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம் , கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ண நோய்களைத் தடுக்கிறது .

 வெல்லம் கரைத்த நீரில் , சிறிதளவு சுக்கை இடித்துப் போட்டு , எலுமிச்சை சாறு கலந்து பருக , கோடை வெயிலுக்கு நல்லது .

 வெட்டிவேர் போட்ட நீரை வடிகட்டி , ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து , தர்பூசணி பழத்துண்டுகளைச் சேர்த்து பருகினால் , உடல் சூடு குறையும் .

 கோடையில் உண்டாகும் நீர் கடுப்பு குறைய , எலுமிச்சை சாறில் , சிறிதளவு நல்லெண்ணை கலந்து குடிக்க குணமாகும் .

 எலுமிச்சை சாறு பருகுவதால் , பித்தம் குறையும் .

 சோற்றுக் கற்றாழையுடன் , எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் , சரும பிரச்சனை தீரும் . குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துக் குளித்தாலும் சரும நோய் அண்டாது .

 தினமும் இரு வேளை எலுமிச்சை தேநீர் (Lemon Tea) பருகுவது உடல் நலனுக்கு உகந்தது .

 பிளாக் டீயில் (black tea) சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலுக்கும் , மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும் .

No comments:

Post a Comment