Tuesday, 23 August 2016

எம்பிபிஎஸ் மருந்துக்கடைகள்.....! / MBBS pharmacies .....!


எம்பிபிஎஸ் மருந்துக்கடைகள்.....!
சளி, இருமல், உடல் வலி ரோதனை அதிகரிச்ச நிலையில ஒரு எம்பிபிஎஸ் டாக்டரைத்தான் பார்ப்பமேன்னு போய் உட்கார்ந்தேன். நர்சு அம்மா தெர்மா மீட்டரை கொடுத்தாங்க...உங்களுக்கு மருந்து ஏதும் அலர்ஜி இல்லையேன்னு கேட்டாங்க...இல்லைன்னேன். சரி வெயிட் பண்ணுங்கன்னாங்க. டெம்ப்ரேச்சர் எப்படி இருக்குன்னு நர்சு அம்மாகிட்ட கேட்டேன் ..நார்மல் அப்படீன்னாங்க.
டாக்டரைப் பார்த்தேன், அவர் என்னைப்பர்த்தார்..ஸ்டெத் வச்சுப்பார்த்தார். கர் கர் என்றது நெஞ்சு. ரொம்ப மோசமா இருக்கே...காஸ்ட்லியான மருந்து எழுதித்தர்றேன், அப்படீன்னு மளிகைக்கடை லிஸ்ட் போல எழுதினார். கூடவே இன்ஹேலர் யூஸ் பண்ணுவீங்களா ? என்றார்..நான் செய்ததில்லை செய்யப்போவதுமில்லை என்றேன்..எதுக்கும் அதையும் பிரிஸ்கிரிப்ஷன்லையே எழுதி இருக்கேன். வாங்கி வச்சுக்குங்க. இந்த மாத்திரைகளையெல்லாம் மூனு நாளைக்கு தொடர்ந்து சாப்பிடுங்க. நல்லாயிடுச்சேன்னு நிறுத்தவேண்டாம் கூடுதலா ரெண்டு நாள் சாப்பிடுங்க...எதுக்கும் ஒருதடவை வந்து கேட்டுட்டு நிறுத்துங்க..என்று சொல்லிவிட்டு.. லிஸ்ட் எழுதியதற்கு ஊதியமாக கன்சல்டன்சி பீஸ் 120 வாங்கிக்கொண்டார். கூடவே சொன்னார்... பக்கத்து மெடிக்கல் ஷாப்பிலேயே எல்லா மருந்தும் கிடைக்கும்னு.
ஓ...பரவாயில்லையே...என்று நன்றி சொல்லிவிட்டு மருந்துக்கடைக்காரரிடம் லிஸ்டை சாரி பிரிஸ்கிரிப்ஷனை நீட்டினேன். திடீரென்னு ஏதோ ஒரு உள்ளுணர்வு....எல்லா மாத்திரைகளிலும் ஒரு வேளைக்கு மட்டும் கொடுங்க என்றேன்...என்னை மேலும் கீழும் பார்த்தவர் ஒரு வேளைக்கு மட்டும் கொடுத்தார். ஒரு வேளைக்கு மட்டுமே 79 ரூபாய் வந்தது. 15 வேளைக்கு என்றால் கிட்டத்தட்ட 1200 ரூபாய் வந்தது.
ஏதோ யோசனை வந்தவனாக தாவர மருத்தும் அறிந்த தோழி ஒருவருக்கு போன் செய்தேன். விசயத்தைச் சொன்னேன். சிரித்தவர் வீட்டுக்குச் சென்று அருகில் உள்ள மளிகைக்கடை ஒன்றுக்கு சென்றுவிட்டு போன் செய்யச்சொன்னார். போகும்போது கற்பூரவல்லி மற்றும் துளசி வாங்கிச்செல்லுமாறும் சொன்னார். மளிகைக்கடைக்குப்போனபோது அவர் சொன்ன பொருட்களை வாங்கினேன்..சுக்கு, பூண்டு இப்படி...125 ரூபாய்தான் வந்தது.
வீட்டுக்கு வந்து மறுபடியும் அவருக்கு போன். அவர் டைரக்ட் செய்தபடி பொருட்களை தண்ணீரில் காய்ச்சி அதைவடிகட்டி மூன்று கப்புகள் அருந்தினேன். சுகமான உறக்கம். தொடர்ச்சியா இரண்டு நாள் அதே கலவைதான் காஃபி, டீக்குப் பதிலாக...
பூரண நலம்.....
அப்பா எம்பிபிஎஸ்களா....இனிமே கிளினிக்கெல்லாம் வக்காதீங்க ஸ்ட்ரெய்ட்டா மருந்துக்கடைகள்ளையே உக்காந்துருங்க....யாவாரம் நல்லா நடக்கும்.
பின்குறிப்பு : எம்பிபிஎஸ் படித்தும்..சேவை மனப்பான்மையோடு செயல்படும் மருத்துவர்கள் விதிவிலக்குகள்.

No comments:

Post a Comment