Tuesday, 2 August 2016

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

A + B + C: ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், ஒரு காரட், மூன்றையும் எடுத்து நன்கு கழுவித் துடைத்து
தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

இந்த பானம் அருந்துவதால் பயன்கள்:

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்லதாம் இந்த ஜூஸ்.

ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களைத் தடுக்கிறது.

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது.

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது.

பார்வைக் குறைபாடுகளை நீக்குகின்றது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்குத் தீர்வு.

உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு.

கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள். அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும்.

No comments:

Post a Comment