Wednesday, 19 October 2016

மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள்

மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள் 
 இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலைமாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.
 நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.
 எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கிசெடிஇலைதண்டுவேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலிவீக்கம் குறையும்.
 எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலிவீக்கம் இரத்தப்போக்கு தணியும்.
 வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.
 கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.
 மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.
 பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலைமாலைபருகிவர நல்ல பலன் கிடைக்கும்.
 வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.
 மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம்இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்

No comments:

Post a Comment